செய்திகள் (Tamil News)
பண்ருட்டி அருகே வியாபாரிக்கு கத்திக்குத்து
பண்ருட்டி அருகே வியாபாரியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்பா சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 45). இளநீர் வியாபாரி. இவர் காட்டுவேகாக்கொல்லை பகுதிக்கு இளநீர் கொண்டு சென்றார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40). அவரது மகன்கள் ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோர் கந்தவேலிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்பு அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த கந்தவேல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் கடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார். ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்பா சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 45). இளநீர் வியாபாரி. இவர் காட்டுவேகாக்கொல்லை பகுதிக்கு இளநீர் கொண்டு சென்றார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40). அவரது மகன்கள் ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோர் கந்தவேலிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்பு அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த கந்தவேல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் கடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார். ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews