செய்திகள்

குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு

Published On 2018-07-26 11:46 GMT   |   Update On 2018-07-26 11:46 GMT
ராஜபாளையம் அருகே உள்ள களங்கா பேரிபுதூரில் குடிநீர் குழாயில் சரி செய்ய ஏற்பாடு செய்த எம்எல்ஏவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள களங்கா பேரிபுதூரில் மாதம் நடைபெற்ற நெடுஞ்சாலை பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்தப்பகுதி மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். நடவடிக்கை எடுக்காததால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

அதனை அடுத்து நேற்று சாலைமறியலில் ஈடுபட அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.இது குறித்து தகவல் கிடைத்தவுடன் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் களங்கா பேரிபுதூருக்கு நேரில் சென்று அந்த ஊர் மக்களை சமாதானப்படுத்தி சாலைமறியலை கைவிடச் செய்தார்.

மேலும் மறுநிமிடமே ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமியை போன்மூலம் தொடர்பு கொண்டு அவரையும் அங்கு வரவழைத்து மக்களுடன் மக்களாக அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். #tamilnews
Tags:    

Similar News