செய்திகள்

தப்பி ஓடிய கைதியை விரட்டி பிடித்த போலீசார்

Published On 2018-07-27 12:03 GMT   |   Update On 2018-07-27 12:03 GMT
கமுதி அருகே வீடு புகுந்து 5 பவுன் நகைகளை திருடிய கொள்ளையனை சிறையில் அடைக்க அழைத்து செல்லும் வழியில் தப்பி ஓடிய கைதியை போலீசார் மடக்கிப்பிடித்தார்.
கமுதி:

கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகம் தீர்த்தான் அச்சங்குளம் கிராமத்தில் வீடு புகுந்து 5 பவுன் நகைகளை திருடியதாக ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்து முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணைக்காக மகாலிங்கத்தை போலீசார் கமுதி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் முதுகுளத்தூர் சிறையில் அடைக்க கமுதி கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்போது போலீசாரை ஏமாற்றி விட்டு மகாலிங்கம் தப்பி ஓடினார். போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மகாலிங்கத்தை விரட்டி பசும்பொன் விலக்கு சாலை அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News