செய்திகள்
வேலூர் ஜெயிலில் கொலை வழக்கு கைதி திடீர் மரணம்
வேலூர் ஜெயிலில் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேலூர்:
வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத்அலி (வயது 51) சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளும், பாகாயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத்அலி (வயது 51) சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளும், பாகாயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.