செய்திகள்

விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலைக்கு ஆயுதம் சப்ளை - வாலிபர் கைது

Published On 2018-07-31 10:14 GMT   |   Update On 2018-07-31 10:14 GMT
விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலைக்கு ஆயுதம் சப்ளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது25), விடுதலை சிறுத்தை பிரமுகர். இவர் கடந்த 14-ந்தேதி மாலை மோட்டார் சைக்கிளில் கணுவாய்ப்பேட்டை வழியாக வீடு திரும்பிய போது பின்தொடர்ந்து வந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளான கணுவாய்ப்பேட்டை புதுநகரை சேர்ந்த அய்யனார் (22) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே விடுதலைசிறுத்தை பிரமுகர் இளவரசனை கொல்ல கொலையாளிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் (23) என்பவர் சப்ளை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் தேடிவந்தனர்

இந்த நிலையில் நேற்று இரவு கோட்டைமேடு பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த ராஜேந்திரனை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தகக்து.
Tags:    

Similar News