செய்திகள்
தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
எட்டயபுரம் அருகே கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க.வின் தீவிர தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவேரி மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க.வின் தீவிர தொண்டரான ஒருவர் எட்டயபுரம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எட்டயபுரம் அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42). இவர் அங்குள்ள 13-வது வார்டில் தி.மு.க. உறுப்பினராக உள்ளார். தி.மு.க. மீதும், கருணாநிதி மீதும் அதிக பற்றுக்கொண்டவர்.
தி.மு.க. பொதுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வாராம். மேலும் செல்வக்குமார் தனது இருசக்கர வாகனத்தை தி.மு.க. கொடிகளாலும், கருணாநிதி படங்களாலும் அலங்கரித்து வைத்துள்ளார். இதனிடையே கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு குறித்த தகவல் கேள்விப்பட்ட நாளில் இருந்து செல்வக்குமார் சரியாக சாப்பிடாமல் கவலையுடன் இருந்தாராம்.
மேலும் கருணாநிதிக்காக உயிரையே கொடுப்பேன் என பலமுறை கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்திற்கு சென்ற செல்வகுமார் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத் ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வ குமாருக்கு, அருணாசல வடிவு என்ற மனைவியும், அழகுராஜா (25) என்ற மகனும், அன்னலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர்.
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவேரி மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க.வின் தீவிர தொண்டரான ஒருவர் எட்டயபுரம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எட்டயபுரம் அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42). இவர் அங்குள்ள 13-வது வார்டில் தி.மு.க. உறுப்பினராக உள்ளார். தி.மு.க. மீதும், கருணாநிதி மீதும் அதிக பற்றுக்கொண்டவர்.
தி.மு.க. பொதுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வாராம். மேலும் செல்வக்குமார் தனது இருசக்கர வாகனத்தை தி.மு.க. கொடிகளாலும், கருணாநிதி படங்களாலும் அலங்கரித்து வைத்துள்ளார். இதனிடையே கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு குறித்த தகவல் கேள்விப்பட்ட நாளில் இருந்து செல்வக்குமார் சரியாக சாப்பிடாமல் கவலையுடன் இருந்தாராம்.
மேலும் கருணாநிதிக்காக உயிரையே கொடுப்பேன் என பலமுறை கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்திற்கு சென்ற செல்வகுமார் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத் ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வ குமாருக்கு, அருணாசல வடிவு என்ற மனைவியும், அழகுராஜா (25) என்ற மகனும், அன்னலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர்.