செய்திகள்

ஜெயலலிதா போல் கலைஞருக்கும் மெரினாவில் இடம் தரவேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2018-08-07 17:16 GMT   |   Update On 2018-08-07 17:16 GMT
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் தரவேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பல தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பலர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ஜெயலலிதாவை போலவே, கருணாநிதியும் தமிழக மக்களின் குரலாக இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மா. கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியும் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #Marina @RahulGandhi #RIPDrKalaignar
Tags:    

Similar News