செய்திகள்
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர்- மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி செலுத்தி, மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். #கலைஞர் #DMK #RIPKarunanidhi
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலில் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 7.45 மணியளவில் ராஜாஜி அரங்கத்திற்கு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கனிமொழி உடனிருந்தார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலில் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 7.45 மணியளவில் ராஜாஜி அரங்கத்திற்கு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கனிமொழி உடனிருந்தார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK