செய்திகள்
ஆற்காடு, செய்யாறு வழித்தடத்தில் உயிரை பணயம் வைத்து பஸ்சின் படியில் செல்லும் பயணிகள்
ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழித்தடத்தில் உயிரை பணயம் வைத்து பஸ்சின் படிக்கட்டிலும், பின்புறத்திலும் தொங்கிய படி பயணிகள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கலவை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும், பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான காலையில் இயக்கப்படுவதில்லை. கலவை கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஆற்காடு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று படிக்கின்றனர்.
அதேபோல் ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்காக வருபவர்களும் அதிகமாக பயணிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். காலை நேரத்தில் ஒன்றிரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே செல்கிறது. இதனால், பயணிகள் கூட்டம் முண்டியடித்து கொண்டு அலை மோதுகிறது.
பெரும்பாலும் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் படிக்கட்டில் பயணிக்கின்றனர். இதிலும் சிலர், பஸ் பின்புறத்தில் தொங்கியவாறே பயணிக்கின்றனர். உயிரை பணயம் வைத்து, பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் செவி சாயக்க மறுத்து வருவதால், தொங்கியபடியே பயணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட ஆற்காடு- செய்யாறு வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கலவை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும், பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான காலையில் இயக்கப்படுவதில்லை. கலவை கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஆற்காடு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று படிக்கின்றனர்.
அதேபோல் ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்காக வருபவர்களும் அதிகமாக பயணிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். காலை நேரத்தில் ஒன்றிரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே செல்கிறது. இதனால், பயணிகள் கூட்டம் முண்டியடித்து கொண்டு அலை மோதுகிறது.
பெரும்பாலும் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் படிக்கட்டில் பயணிக்கின்றனர். இதிலும் சிலர், பஸ் பின்புறத்தில் தொங்கியவாறே பயணிக்கின்றனர். உயிரை பணயம் வைத்து, பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் செவி சாயக்க மறுத்து வருவதால், தொங்கியபடியே பயணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட ஆற்காடு- செய்யாறு வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews