செய்திகள்

சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டு மீது வழக்கு

Published On 2018-08-22 14:31 GMT   |   Update On 2018-08-22 14:31 GMT
முன் விரோத தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டு மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கீழ செக்கடி தெருவை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி பூமாரி(வயது50). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார்(48). இவர் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். 

அசோக்குமாருக்கும், ராமராஜ் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக ராமராஜின் மனைவி பூமாரிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் பூமாரியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். 

இது பற்றி பூமாரி சங்கரன் கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஏட்டு அசோக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News