செய்திகள்

வால்பாறை பகுதியில் எஸ்டேட், குடியிருப்புகளில் மண் சரிவு - விரிசல்

Published On 2018-08-27 05:56 GMT   |   Update On 2018-08-27 05:56 GMT
வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, பூமியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை நிலநடுக்கம் என நினைத்து பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

மழை காரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும், பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி, நடுமலை, சோலையார், கருமலை, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மண்சரிவும் பூமி விரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதனால் எஸ்டேட் நிர்வாகங்கள் பாதுகாப்பு நலன் கருதி தொழிலாளர்களை தேயிலை இலை பறிக்கும் பணிக்கு அனுப்பவில்லை. அய்யர்பாடி, சோலையார் எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எஸ்டேட் நிர்வாகங்கள் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேறு பகுதிகளில் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, விரிசலை சிலர் நிலநடுக்கம் என நினைத்து பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News