செய்திகள்
மகன் காதலியுடன் ஓடியதால் குடும்பத்தினரை அடித்து, உதைத்த போலீசார்
ஜோலார் பேட்டை போலீசார் எங்கள் குடும்பத்தை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வேலூர்:
வாணியம்பாடி தாலுகா கலந்திரா கிராமம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பாபு மனைவி ராஜாத்தி என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுப்பதற்காக வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனை செய்த போது, அவரிடம் 1 லிட்டர் பாட்டிலில் மண்எண்ணை இருந்தது. மண்எண்ணையை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், எங்களது மகன், பாலாணங்குப்பத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து, ஊரை விட்டு இழுத்துக் கொண்டு ஓடி விட்டார். மகன் காதலித்த விவகாரத்தில் ஜோலார் பேட்டை போலீசார் எங்கள் குடும்பத்தை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர்.எங்களை கொடுமைப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கொடுத்த மனுவில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் தரை கடை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, போலீசாருடன் சேர்ந்து தரைக்கடைகளை அகற்றினர்.
மீண்டும் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
வாணியம்பாடி தாலுகா கலந்திரா கிராமம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பாபு மனைவி ராஜாத்தி என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுப்பதற்காக வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனை செய்த போது, அவரிடம் 1 லிட்டர் பாட்டிலில் மண்எண்ணை இருந்தது. மண்எண்ணையை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், எங்களது மகன், பாலாணங்குப்பத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து, ஊரை விட்டு இழுத்துக் கொண்டு ஓடி விட்டார். மகன் காதலித்த விவகாரத்தில் ஜோலார் பேட்டை போலீசார் எங்கள் குடும்பத்தை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர்.எங்களை கொடுமைப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கொடுத்த மனுவில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் தரை கடை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, போலீசாருடன் சேர்ந்து தரைக்கடைகளை அகற்றினர்.
மீண்டும் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews