செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே கூலித்தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு
கிருமாம்பாக்கம் அருகே கூலித்தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:
வெங்கடேசன் தினமும் வேலைமுடிந்து இரவில் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அதுபோல நேற்று மாலை வேலை முடிந்து மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். போதையில் தள்ளாடியபடியே வந்த அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டின் கூரை கம்பு தலை மற்றும் முதுகில் குத்தியது. இதனால் தடுமாறி வெங்கடேசன் கீழே மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குபதிவு செய்து தடுமாறி விழுந்ததில் வெங்கடேசன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவிலை அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது55), கூலித்தொழிலாளி. இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.
வெங்கடேசன் தினமும் வேலைமுடிந்து இரவில் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அதுபோல நேற்று மாலை வேலை முடிந்து மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். போதையில் தள்ளாடியபடியே வந்த அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டின் கூரை கம்பு தலை மற்றும் முதுகில் குத்தியது. இதனால் தடுமாறி வெங்கடேசன் கீழே மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குபதிவு செய்து தடுமாறி விழுந்ததில் வெங்கடேசன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.