செய்திகள் (Tamil News)

சேலையூர் அருகே விவசாயிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2018-08-31 09:37 GMT   |   Update On 2018-08-31 09:37 GMT
சேலையூர் அருகே விவசாயிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

வேளச்சேரி:

கோவிலஞ்சேரி அகரம் மெயின் ரோட்டைசேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவர் சேலையூரை அடுத்த ராஜ கீழபாக்கத்தில் உள்ள வங்கிக்கு இன்று வந்திருந்தார். அங்கு ரூ.2 லட்சத்தை எடுத்து ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். ஹெல்மெட் அணிந்திருந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த 10 ரூபாய் நோட்டை கீழே சிதறி விட்டனர்.

பின்னர் சீனிவாசனிடம், கீழே 10 ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது. அது உங்களுடையதா? என கேட்டனர். அதை எடுக்க அவர் கீழே குனிந்த போது கையில் வைத்திருந்த ‘பேக்’கையும், செல்போனையும் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

Similar News