செய்திகள்

சிவகாசி அருகே இன்று தீப்பெட்டி ஆலையில் விபத்து - தொழிலாளி உடல் கருகினார்

Published On 2018-09-01 08:02 GMT   |   Update On 2018-09-01 08:02 GMT
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் நடந்த விபத்தில் உடல் கருகிய தொழிலாளி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவகாசி:

சிவகாசியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் தாயில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் (வயது 48) என்பவர் ஒரு அறையில் ரசாயன மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மருந்து கலவைகள் உரசி தீப்பிடித்தது. அருகில் மத்தாப்புகளும் இருந்ததால் அதில் தீப்பிடித்து மளமளவென பரவி புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய நாகராஜன் உடல் கருகினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

தீயில் உடல் கருகிய நாகராஜனை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags:    

Similar News