செய்திகள்

புவனகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-09-08 13:31 GMT   |   Update On 2018-09-08 13:31 GMT
புவனகிரி அருகே விபத்தில் தம்பி சிக்கியதில் மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவரது தம்பி மணிவேல். இவர் விபத்து ஒன்றில் சிக்கி மயக்கநிலையில் வீட்டில் இருந்து வருகிறார்.

ராஜலட்சுமி சாத்தப்பாடியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்று அவரை பார்த்தார். அதன் பின்பு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் யாரிடமும் பேசாமல் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

உடலில் தீ பிடித்ததும் கூச்சல்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ராஜலட்சுமி இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News