செய்திகள் (Tamil News)

வால்பாறையில் வேன் -ஆம்னி கார் மோதி விபத்து: 8 பேர் படுகாயம்

Published On 2018-09-24 09:37 GMT   |   Update On 2018-09-24 09:37 GMT
வால்பாறையில் வேன்-ஆம்னி கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சேக்கல்முடி சப்-இன்ஸ்பெக்டர் காலிப் விசாரணை நடத்தி வருகிறார்.
வால்பாறை:

வால்பாறையிலிருந்து சோலையார் அணைக்கு செல்லும் வழியில் உருளிக்கல் எஸ்டேட் பெரியகடை பகுதியைச் சேர்ந்தவர் முகமதுஅசீக்(18).இவர் சாலை ஓரத்தில் தனது வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை ஓட்டிக் கொண்டு சாலைக்குவந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து உருளிக்கல் எஸ்டேட்டிலிருந்து வால்பாறை நோக்கி வந்த ஆம்னி காரின் மீது மோதியது.

இதில் ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கி சாலை ஓரத்திலிருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது.இதில் மாருதி ஆம்னி கார் டிரைவர் கிருஷ்ணகுமார்(24), தங்கவேல்(66), பழனியம்மாள்(60), ராணி(58), அபிசக்தி(11), சங்கர்(11), அங்கம்மாள்(60), கனகா(32) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் தங்கவேல், பழனியம்மாள் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்கள்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த சேக்கல்முடி சப்-இன்ஸ்பெக்டர் காலிப் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News