செய்திகள்
சொத்துவரி கட்டாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு- மாநகராட்சி நடவடிக்கை
ராயப்பேட்டையில் சொத்துவரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பியும் வரியை கட்டாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி 9-வது மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டை ஒயிட் சாலை பகுதியில் 5 கடைகளின் உரிமையாளர்கள் முறையான சொத்துவரி மாநகராட்சிக்கு செலுத்தவில்லை.
மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு சொத்துவரி நிலுவை தொகையினை மாநகராட்சிக்கு உடனே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனாலும் சொத்துவரி பாக்கி தொகை ரூ.22 லட்சம் செலுத்தப்படாமல் இருந்தது. சொத்துவரியை செலுத்த 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் அவர்கள் செலுத்தவில்லை.
இதனையடுத்து அந்த 5 கடைகளையும் இன்று மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடையின் முகப்பு பகுதியில் எச்சரிக்கை நோட்டீசையும் ஒட்டினர். அவை டயர் விற்பனை செய்யக் கூடிய வியாபாரிகளின் கடைகளாகும். மாநகராட்சி அதிகாரிகள் லட்சுமி நாராயணன், தமிழ்செல்வன், சீனிவாசன், ராஜூ ஆகியோர் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு 2014-ம் ஆண்டு முதல் சொத்துவரி செலுத்தவில்லை. மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். #tamilnews
சென்னை மாநகராட்சி 9-வது மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டை ஒயிட் சாலை பகுதியில் 5 கடைகளின் உரிமையாளர்கள் முறையான சொத்துவரி மாநகராட்சிக்கு செலுத்தவில்லை.
மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு சொத்துவரி நிலுவை தொகையினை மாநகராட்சிக்கு உடனே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனாலும் சொத்துவரி பாக்கி தொகை ரூ.22 லட்சம் செலுத்தப்படாமல் இருந்தது. சொத்துவரியை செலுத்த 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் அவர்கள் செலுத்தவில்லை.
இதனையடுத்து அந்த 5 கடைகளையும் இன்று மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடையின் முகப்பு பகுதியில் எச்சரிக்கை நோட்டீசையும் ஒட்டினர். அவை டயர் விற்பனை செய்யக் கூடிய வியாபாரிகளின் கடைகளாகும். மாநகராட்சி அதிகாரிகள் லட்சுமி நாராயணன், தமிழ்செல்வன், சீனிவாசன், ராஜூ ஆகியோர் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு 2014-ம் ஆண்டு முதல் சொத்துவரி செலுத்தவில்லை. மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். #tamilnews