செய்திகள் (Tamil News)

திருச்சியில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்

Published On 2018-09-26 13:01 GMT   |   Update On 2018-09-26 13:01 GMT
திருச்சியில் வேலைக்கு சென்ற இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அறிவரசி (வயது 25). திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக வேலை செய்து வருகிறார். தினமும் பஸ்சில்  மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம். 

சம்பவதன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டிருந்த போது அறிவரசி திடீரென்று மாயமாகியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி உறையூர் மருதாண்டாக்குறிச்சி சந்தோஷ்நகரை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகள்  ராஜேஸ்வரி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அதிகாலையில் வீட்டை வீட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகாநகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 22). திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறார். 

இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச்சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து திருச்சி  அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News