செய்திகள்

கிண்டியில் கார் உதிரிபாக குடோனில் தீ விபத்து

Published On 2018-10-02 08:43 GMT   |   Update On 2018-10-02 08:43 GMT
கிண்டியில் கார் உதிரிபாக குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident

சென்னை:

கிண்டியில் தனியார் கார் ஷோரூம் உதிரிபாக சர்வீஸ் சென்டர் மற்றும் குடோன் உள்ளது. இங்கு நேற்று இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றிருந்தனர். இன்று காலையில் வந்து பார்த்த போது குடோனில் இருந்து தீ புகை வருவதை கண்டனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கிண்டி, ராஜ்பவன், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் குடோனில் இருந்த ஏராளமான பொருட்கள் வெடித்து சிதறி தீப் பிடித்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

Tags:    

Similar News