செய்திகள் (Tamil News)
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது56). இவர் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் குழுவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ள எனது மகனுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.
இதை நம்பி ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆண்டோ ஜெனிபர், டெல்பின்மேரி, பார்த்திபன், ஆண்டனி அஞ்சலி ஆகியோர்களின் வங்கி கணக்குகளில் ரூ.24 லட்சத்து 4 ஆயிரத்து 900 செலுத்தினேன்.
பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 2 ஆண்டுகள் ஆகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சட்டப்பணிகள் குழு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி ரூ.24 லட்சம் மோசடி செய்த ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். #tamilnews
ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது56). இவர் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் குழுவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ள எனது மகனுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.
இதை நம்பி ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆண்டோ ஜெனிபர், டெல்பின்மேரி, பார்த்திபன், ஆண்டனி அஞ்சலி ஆகியோர்களின் வங்கி கணக்குகளில் ரூ.24 லட்சத்து 4 ஆயிரத்து 900 செலுத்தினேன்.
பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 2 ஆண்டுகள் ஆகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சட்டப்பணிகள் குழு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி ரூ.24 லட்சம் மோசடி செய்த ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். #tamilnews