செய்திகள் (Tamil News)

திருச்சியில் பெண் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2018-11-22 15:15 GMT   |   Update On 2018-11-22 15:15 GMT
திருச்சியில் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற பெண் மாயமானார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி வயலூர் ரோடு 1-வது  கிராஸ்,கணபதி நகரைசேர்ந்த வர் ராஜசேகரன். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (வயது 51). இவர் கடந்த 16-ந் தேதி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. ராஜசேகரன் அவரை பல இடங்களில் தேடினார். எங்கும் தேடியும் ஜெகதீஸ்வரி கிடைக்க வில்லை. 

இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
Tags:    

Similar News