செய்திகள் (Tamil News)

அரியூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளை

Published On 2018-11-25 10:16 GMT   |   Update On 2018-11-25 10:16 GMT
அரியூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு பல ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

வேலூர்:

அரியூர் அருகே ஜமால்புரம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து சூப்பர் வைசர் அண்ணாதுரை மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

நள்ளிரவில் மர்ம கும்பல் கடப்பாறை கொண்டு கடையின் சுவற்றை இடித்து துளைபோட்டனர். உள்ளே புகுந்த அவர்கள் பல ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை அள்ளி சென்றுவிட்டனர்.

இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது தொடர்பாக அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த டாஸ்மாக் கடையில் ஏற்கனவே இதேபோல் கும்பல் துளையிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு கேமரா பொருத்து பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு பக்க சுவரை துளையிட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News