செய்திகள் (Tamil News)

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2018-12-16 18:30 GMT   |   Update On 2018-12-16 18:30 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள அம்புஜவல்லிபேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி கலா (வயது 37). இவர் சம்பவத்தன்று இரவு மாமியார், குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

பின்னர் தூங்கிக்கொண்டிருந்த கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன், திருடன் என சத்தம்போட்டார். இதனால் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் எழுந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News