செய்திகள்

காதலிக்க மறுத்த வாலிபர் மீது தாக்குதல் - 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2018-12-20 10:26 GMT   |   Update On 2018-12-20 10:26 GMT
மதுரை திருநகரில் காதலிக்க மறுத்த வாலிபரை தாக்கியதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை திருநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனக்கன்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு பணியாற்றிய ஒரு பெண் ஒருதலையாக காதலித்தார்.

இதனை ஏற்க மறுத்த நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறுநிறுவனத்தில் சேர்ந்தேன்.

இந்த நிலையில் அந்த பெண் தனது சகோதரி அவரது கணவரோடு வீடு புகுந்து தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து திருநகர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News