திருப்பூரில் பட்டப்பகலில் ஜோதிடர் வெட்டிக் கொலை
திருப்பூர்:
திருப்பூர் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஜோதிடர். இன்று மதியம் அதே பகுதியில் ஜோதிடம் பார்த்தார்.
அப்போது மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் ஜோதிடர் ரமேசை அரிவாளால் தலை, தோள் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜோதிடர் அலறி சத்தம்போட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கினார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிடரை பார்த்தபோது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியையும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.