செய்திகள்

பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Published On 2019-01-10 10:23 GMT   |   Update On 2019-01-10 10:55 GMT
பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. #SupremeCourt #10pcreservation #economicalweakersection
டெல்லி:

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சமத்துவத்துக்கான இளைஞன் (Youth for Equality) என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt #10pcreservation #economicalweakersection 
Tags:    

Similar News