செய்திகள்
அரக்கோணம் அருகே சேலையில் தீப்பிடித்து கல்லூரி மாணவி படுகாயம்
அரக்கோணம் அருகே சமையல் செய்து கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்த மாணவிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தக்கோலம்:
அரக்கோணம் அடுத்த நெமிலி துறையூர் மோட்டூரை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் தனலட்சுமி (வயது19). வாலாஜாவில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்து உள்ளார்.
அப்போது எதிர்பாராமல் தனலட்சுமி அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சிலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தனலட்சுமியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
அரக்கோணம் அடுத்த நெமிலி துறையூர் மோட்டூரை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் தனலட்சுமி (வயது19). வாலாஜாவில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்து உள்ளார்.
அப்போது எதிர்பாராமல் தனலட்சுமி அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சிலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தனலட்சுமியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews