செய்திகள் (Tamil News)

குத்தாலம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

Published On 2019-02-09 18:18 GMT   |   Update On 2019-02-09 18:18 GMT
குத்தாலம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:

குத்தாலம் அருகே திருவாவடுதுறை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் மகன் சரவணன் (வயது 29). சரக்கு ஆட்டோ டிரைவர். கடந்த 3 மாதங்களாக சரவணன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாகவே சரவணன், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News