செய்திகள் (Tamil News)

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது - முதலமைச்சர் பேச்சு

Published On 2019-02-24 16:13 GMT   |   Update On 2019-02-24 16:13 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
சென்னை:

சென்னையில் ஜெ. பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

சென்னையில் ரூ 79 ஆயிரம் கோடியில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.  

இன்னும் 3, 4 ஆண்டுகளில் வீடில்லாதவர்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வர அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ளோம்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்?  மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தினர் அதிகாரத்தில் வர முயற்சி செய்தவர் கருணாநிதி. திமுகவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சிப் பதவிக்கு வர முடியும்.


இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு கொல்கத்தாவில் மாற்றி பேசினார் ஸ்டாலின். ராகுல் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறிய கருத்தை ஏற்க முடியாதென சந்திரபாபு நாயுடு கூறிவிட்டார்.

தொழில்வளம் பெருக காரணம் அதிமுக அரசு தடையில்லா மின்சாரம் அளித்தது தான். உபரிமின்சாரம் தயாரிக்கும் நிலையில் தற்போது தமிழகம் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
Tags:    

Similar News