செய்திகள்
அம்பை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைப்பு - வாலிபர் கைது
அம்பை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் சிவன்பாண்டி (வயது 39). கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இதனால் மாரியப்பன் ஆத்திர மடைந்தார். பின்னர் இது குறித்து சிவன்பாண்டியிடம் இனி மேல் எனது மனைவியுடன் பேசக்கூடாது என கூறியுள்ளார். எனினும் அவர் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் நேற்று சிவன் பாண்டியன் வீட்டிற்கு சென்று அங்குள்ள கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இது குறித்து சிவன்பாண்டி அம்பை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.