செய்திகள்

கோவையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7 லட்சம் சிக்கியது

Published On 2019-03-15 10:13 GMT   |   Update On 2019-03-15 10:13 GMT
கோவையில் பறக்கும் படை சோதனையில் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
கோவை:

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம் பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி உலகநாதன் தலைமையில் இன்று வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் ரூ. 7 லட்சம் இருந்தது.

இதனை வடவள்ளியை சேர்ந்த சதீஷ் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் விசாரித்தபோது திருமண நிகழ்ச்சிக்கு மணமேடை அமைக்க அட்வான்சாக இந்த பணத்தை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பணம் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. #ParliamentElection

Tags:    

Similar News