செய்திகள்

தருமபுரி தனியார் கல்லூரி விடுதியில் புட்டு சாப்பிட்டு வாந்தி எடுத்த 5 மாணவிகளுக்கு சிகிச்சை

Published On 2019-04-23 12:43 GMT   |   Update On 2019-04-23 12:43 GMT
தருமபுரி தனியார் கல்லூரி விடுதியில் நள்ளிரவில் புட்டு சாப்பிட 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கு விடுதி அருகே உள்ளது. இந்த விடுதியில் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நண்பர்கள் ஆவர்.

இவர்களது தோழி ஒருவர் நேற்று விடுதிக்கு புட்டு சாப்பிட கொண்டு வந்துள்ளார். அதனை இந்த 5 மாணவிகளும் சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்டு மாணவிகள் அனைவரும் இரவு படுத்து தூங்கினர். இதையடுத்து நள்ளிரவு புட்டு சாப்பிட 5 மாணவிகளுக்கும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்களை சிகிச்சைக்காக 5 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News