செய்திகள்

பழைய வண்ணாரப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2019-05-08 08:41 GMT   |   Update On 2019-05-08 08:41 GMT
பழைய வண்ணாரப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு வீடுகளில் குடிநீர் வராததால் லாரிகளில் கொண்டு வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் லாரி தண்ணீரும் சரியாக கொண்டு வரப்படவில்லை.

இதனால் கடந்த 3 நாட்களாக குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர். இன்று காலை ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் தண்ணீர் லாரிகாக காத்து இருந்தனர்.

ஆனால் தண்ணீர் லாரி வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலி குடங்களுடன் வண்ணாரப்பேட்டை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தண்ணீர் லாரி கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

அப்போது, போலீசாரிடம் பெண்கள் கூறும்போது, “இப்போது போராட்டம் நடத்தியதால் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மீண்டும் குடிநீர் விநியோகிக்கவில்லை. என்றால் தினமும் போராட்டாம் நடத்துவோம்” என்றனர்.
Tags:    

Similar News