செய்திகள்

தஞ்சை அருகே தூக்குமாட்டி மாணவி தற்கொலை

Published On 2019-05-08 11:07 GMT   |   Update On 2019-05-08 11:07 GMT
தஞ்சை அருகே தூக்கு மாட்டி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகள் ஸ்ரீசாரா(வயது16). இவர் அப்பகுதி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீசாரா தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீசாராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து மாணவி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News