செய்திகள்

அரவக்குறிச்சியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-05-09 13:19 GMT   |   Update On 2019-05-09 13:19 GMT
அரவக்குறிச்சியில் இன்று காலை வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி சீத்தபட்டி பழையகாலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவர் இன்று காலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மூர்த்தி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன மூர்த்திக்கு மனைவியும் 1 மகன்,1 மகள் உள்ளனர். அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News