செய்திகள்

மது பழக்கத்தை கைவிட முடியாததால் துப்புரவு தொழிலாளி தற்கொலை

Published On 2019-05-20 10:21 GMT   |   Update On 2019-05-20 10:21 GMT
ராஜபாளையத்தில் மது பழக்கத்தை கைவிட முடியாததால் வி‌ஷம் குடித்து துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 30). ‘செப்டிக் டேங்க்‘ சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார்.

இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது சித்ரா, 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இசக்கிமுத்து கடந்த சில நாட்களாக அதிகமாக மது அருந்தினார்.

இதனை மனைவி சித்ரா கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த இசக்கிமுத்து, வி‌ஷம் (குருணை மருந்து) குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவருடைய தந்தை சித்ராயா, ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News