செய்திகள் (Tamil News)
பட்டாசு ஆலை

அரசின் கட்டுப்பாடுகளால் விருதுநகரில் பட்டாசு ஆலைகள் செயல்படுவதில் சிக்கல்

Published On 2020-04-19 14:08 GMT   |   Update On 2020-04-19 14:08 GMT
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட முடியாத நிலையே உள்ளது என்று தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
விருதுநகர்:

ஊரடங்கு உத்தரவில் நாளை (20-ந்தேதி) முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்படுவதில் சிக்கல் இருப்பதாக பட்டாசு தயாரிப்பார்கள் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது சிவகாசியில் உள்ள 954 பட்டாசு தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

பணிகள் தொடங்கும் முன்பு பட்டாசு தொழிற்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், 50 சதவீதம் ஊழியர்களைத்தான் பணியமர்த்த வேண்டும், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஊழியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இவற்றையெல்லாம் கடைபிடிப்பது என்பது இயலாத காரியம். இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட முடியாத நிலையே உள்ளது என்று தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

Similar News