செய்திகள் (Tamil News)
கைது

ராமநாதபுரம் அருகே சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-06-30 17:23 GMT   |   Update On 2021-06-30 17:23 GMT
ராமநாதபுரம் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் கேணிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஓட்டலின்பின்புற பகுதியில் சிலர் பணம் வைத்து உள்ளே வெளியே சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ராமநாதபுரம் சாயக்காரத்தெரு சசிக்குமார் (வயது45), கேணிக்கரை முகம்மதுஅலி ஜின்னா (51). ஷாஜகான் (46), அருப்புக்காரத்தெருசதாம்உசேன் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ.13 ஆயிரத்து 200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News