செய்திகள் (Tamil News)
டீக்கடையில் லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது
டீக்கடையில் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் பசுபதிபாளையம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் பசுபதிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாபு (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.