செய்திகள்
திருட்டு

அறந்தாங்கி அருகே கடையின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு

Published On 2021-11-13 12:21 GMT   |   Update On 2021-11-13 12:21 GMT
அறந்தாங்கி அருகே கடையின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடியை சேர்ந்தவர் ரகு (வயது 37). இவர் வல்லவாரி கிழக்குகடை தெருவில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பின் பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2½ லட்சம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News