செய்திகள்
கொள்ளை

தரகம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3¼ லட்சம் திருட்டு

Published On 2021-11-13 12:44 GMT   |   Update On 2021-11-13 12:44 GMT
தரகம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3¼ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரகம்பட்டி:

கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டியை சேர்ந்தவர் அஜ்மல் ரகுமான் (வயது 27). இவர் குளிர்பானம் மற்றும் பிஸ்கெட் வியாபாரம் செய்து வருகிறார். அஜ்மல் ரகுமான் தனது குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள தனது அத்தை மகன் திருமணத்திற்கு சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News