செய்திகள் (Tamil News)
விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வழங்கினர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
புவனகிரி:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணத மழை பொழிந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கியது. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது.
குறிப்பாக சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அதன்படி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை புவனகிரி வந்தனர். புவனகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்... மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு- அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு