செய்திகள் (Tamil News)
வெள்ளகோவிலில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாநிலச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் தாராபுரம் பகுதிகளை சேர்ந்த சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் விரோத போக்கை கண்டித்து வெள்ளகோவில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர் சங்க தாராபுரம் கோட்ட தலைவர் வெங்கடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சாலை பணியாளர் சங்க கோட்ட செயலாளர் தில்லையப்பன் விளக்கவுரையாற்றினார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.
மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். இதில் மாநிலச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் தாராபுரம் பகுதிகளை சேர்ந்த சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கோட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.