செய்திகள்
கறம்பக்குடிக்கு செல்லும் மண் சாலை செப்பனிடப்படுமா?
ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் ஊராட்சியில் கறம்பக்குடி வழியே செல்லும் மண் சாலை மிகவும் பழுதடைந்து சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆவுடையார் கோவிலில் இருந்து இந்த வழியாக செல்லும் மினி பஸ் குளத்து குடியிருப்பு, பெருநாவலூர், கறம்பக்குடி, காடங்குடி, திருவாகுடி, குருங்கலூர் வரை சென்று திரும்புகிறது. இந்த பஸ்சில்தான் பெருநாவலூர் மற்றும் ஆவுடையார் கோவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 முறை ஆவுடையார்கோவிலில் இருந்து குருங்கலூர் வரை இந்த மினி பஸ் சென்று வருகிறது. இதனால், மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.