செய்திகள் (Tamil News)
வெள்ளகோவில் குடியிருப்பு அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே காவலர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தலைமை காவலர்கள், காவலர்கள் என மொத்தம் 16 குடும்பங்கள் குடியிருந்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதில் மொத்தம் 100 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.