உள்ளூர் செய்திகள் (District)
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை
கன்னியாகுமரி கடற்கரையில் இறந்த நிலையில் ராட்சத கடல் ஆமை கரை ஒதுங்கியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் நேற்று மாலை கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இதுபற்றி வன கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலக வனச்சரகர் திலீபன் உத்தரவின்படி மருந்துவாழ்மலை வன காப்பாளர்கள் பிரபாகர், அர்ஜுனன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரவீன் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வனத்துறையினர் அந்த ஆமையை அஞ்சுகிராமம் அருகே உள்ள வாரியூர் கால்நடை மருத்துவ மனை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு இந்த கடல் ஆமை கடற்கரை மணலில் புதைக்கப்படுகிறது.