உள்ளூர் செய்திகள் (District)
அக்னி தீர்த்த கடலில் இறங்கி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற சென்ற சிவசேனா கட்சியினர் 47 பேர் கைது

Published On 2022-01-27 03:07 GMT   |   Update On 2022-01-27 03:07 GMT
தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற சிவசேனா கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்:

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், பாரம்பரிய கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிவசேனா கட்சியினர் நேற்று ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக கச்சத்தீவு சென்று தேசியக்கொடி ஏற்றுவதற்கு முயன்றனர்.

ராமேசுவரம் கோவில் ரதவீதி பகுதியில் இருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு வந்தனர். பின்னர் கடலில் இறங்கி கையில் தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற சிவசேனா கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News