உள்ளூர் செய்திகள் (District)
.

வாழப்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2022-02-19 09:13 GMT   |   Update On 2022-02-19 09:13 GMT
வாழப்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
வாழப்பாடி:

வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). அரசு பஸ் டிரைவர். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி மகேஸ்வரியுடன் நேற்று காலை இடையப்பட்டி நெய்யமலை பிரிவு சாலையிலுள்ள தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய செந்தில்குமாரும், இவரது மனைவியும் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News