உள்ளூர் செய்திகள் (District)
எக்விடாஸ் குருகுலம் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை, தேர்தல் நடத்தும் அலுவ

வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Published On 2022-02-19 09:37 GMT   |   Update On 2022-02-19 09:37 GMT
உள்ளாட்சித்தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று தேர்தல்பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம்:

சேலம் மாநகராட்சி  அழகாபுரம் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 9 வாக்குச்சாவடிகள்,  எக்விடாஸ் குருகுலம் மெட்ரிகுலேசன் பள்ளியில் அமைந்துள்ள 4 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் அண்ணா துரை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா,  வாக்குச்சாவடியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும்  பணிக்கு வருகை புரிந்துள்ளார்களா, சிசிடிவி கேரமா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தனர்.

மேலும் நுண்பார்வை யாளர்கள் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதையும், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கையுறை, முகக்கவசம், தெர்மல்ஸ்கேன் கருவி, கை சுத்திகரிப்பான் போன்றவைகள் வைக்கப் பட்டுள்ளதா என்பதையும் அவ்அர்கள் ஆய்வு செய்தனர்.

வாக்குச்சாவடியின் நுழைவுவாயிலில் சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பெயர் எழுதிவைக்கப்பட்டுள்ளதா, வாக்காளர்கள் எவ்வித சிரமுமின்றி வாக்களிப் பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் தயாராக உள்ளதா என்பதையும் பார்வையிட்டனர்.

Similar News